உடுமலை விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை வேளாண் பல்கலை மாணவர்கள்!

வேளாண் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சின்னவீரம்பட்டி பகுதியில் கோவை வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் வேளாண் துறையின் சார்பில் விவசாயத்திற்கு செயல்படுத்துகின்ற திட்டங்கள் குறித்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது மண் மாதிரிகளைச் சேகரித்தும் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலமாக மண்ணை பரிசோதனை செய்தனர்.

அதில் உள்ள குறைபாடுகளுக்குத் தகுந்தாற்போல் ஊட்டச்சத்து உரங்களை இடுவதற்கும் விவசாயிகளுக்குப் பயிற்சியும் அளித்தனர்.

மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

இதில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்,துணை வட்டார வளர்ச்சி அதிகாரி, விதை ஆய்வாளர், வேளாண் அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு துறை சார்ந்த தகவல்களை அளித்தனர்.

அப்போது விவசாயிகள், வேளாண்மை கல்லூரி மாணவர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...