உடுமலை விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை வேளாண் பல்கலை மாணவர்கள்!

வேளாண் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சின்னவீரம்பட்டி பகுதியில் கோவை வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் வேளாண் துறையின் சார்பில் விவசாயத்திற்கு செயல்படுத்துகின்ற திட்டங்கள் குறித்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது மண் மாதிரிகளைச் சேகரித்தும் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலமாக மண்ணை பரிசோதனை செய்தனர்.

அதில் உள்ள குறைபாடுகளுக்குத் தகுந்தாற்போல் ஊட்டச்சத்து உரங்களை இடுவதற்கும் விவசாயிகளுக்குப் பயிற்சியும் அளித்தனர்.

மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

இதில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்,துணை வட்டார வளர்ச்சி அதிகாரி, விதை ஆய்வாளர், வேளாண் அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு துறை சார்ந்த தகவல்களை அளித்தனர்.

அப்போது விவசாயிகள், வேளாண்மை கல்லூரி மாணவர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...