உடுமலை விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை வேளாண் பல்கலை மாணவர்கள்!

வேளாண் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சின்னவீரம்பட்டி பகுதியில் கோவை வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் வேளாண் துறையின் சார்பில் விவசாயத்திற்கு செயல்படுத்துகின்ற திட்டங்கள் குறித்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது மண் மாதிரிகளைச் சேகரித்தும் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலமாக மண்ணை பரிசோதனை செய்தனர்.

அதில் உள்ள குறைபாடுகளுக்குத் தகுந்தாற்போல் ஊட்டச்சத்து உரங்களை இடுவதற்கும் விவசாயிகளுக்குப் பயிற்சியும் அளித்தனர்.

மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

இதில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்,துணை வட்டார வளர்ச்சி அதிகாரி, விதை ஆய்வாளர், வேளாண் அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு துறை சார்ந்த தகவல்களை அளித்தனர்.

அப்போது விவசாயிகள், வேளாண்மை கல்லூரி மாணவர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...