மாணவர்களை யாகபூஜைக்கு அழைத்து சென்ற தனியார் பள்ளி - உடுமலையில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

உடுமலைப்பேட்டையில் தனியார் பள்ளி மாணவர்களை யாக பூஜையில் பங்கேற்க வைத்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களை யாக பூஜைக்கு பள்ளி நிர்வாகம் யாக பூஜைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்றது.



இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உடுமலை ஒன்றிய செயலாளர் தமிழ்த்தென்றல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பள்ளி வேளையில் கல்வி கற்க வேண்டிய மாணவர்களை அரசியல் சாசனத்திற்கு எதிராக மதம் சார்ந்த நிகழ்வில் பங்கெடுக்க வைத்த பள்ளி நிர்வாகத்தின் மீதும் அதற்கு துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்களின் மீது தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் உடனடியாக தீவிர விசாரணை மேற்கொண்டு தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி வளாகங்களில் மதம் சார்ந்த நிகழ்வுகளை அனுமதிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.



ஆர்ப்பாட்டத்தில், இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் பிரவீன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்னாள் தாலுகா செயலாளர் கி.கனகராஜ், முன்னாள் மாவட்ட பொருளாளர் ஓம் பிரகாஷ், கமிட்டி உறுப்பினர் லோகேஷ்வரன் ஆகியோர் கலந்து கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

மேலும், இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நிர்வாகிகள் கார்த்தி, மகேந்திரன், கருப்பசாமி, சுப்ரமணி, அய்யனார், மாதர் சங்கம் சசிகலா, சி.ஐ.டி.யூ நிர்வாகிகள் ஜெகதீசன், ரங்கநாதன், காளிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...