மாணவர்களை யாகபூஜைக்கு அழைத்து சென்ற தனியார் பள்ளி - உடுமலையில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

உடுமலைப்பேட்டையில் தனியார் பள்ளி மாணவர்களை யாக பூஜையில் பங்கேற்க வைத்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களை யாக பூஜைக்கு பள்ளி நிர்வாகம் யாக பூஜைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்றது.



இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உடுமலை ஒன்றிய செயலாளர் தமிழ்த்தென்றல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பள்ளி வேளையில் கல்வி கற்க வேண்டிய மாணவர்களை அரசியல் சாசனத்திற்கு எதிராக மதம் சார்ந்த நிகழ்வில் பங்கெடுக்க வைத்த பள்ளி நிர்வாகத்தின் மீதும் அதற்கு துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்களின் மீது தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் உடனடியாக தீவிர விசாரணை மேற்கொண்டு தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி வளாகங்களில் மதம் சார்ந்த நிகழ்வுகளை அனுமதிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.



ஆர்ப்பாட்டத்தில், இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் பிரவீன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்னாள் தாலுகா செயலாளர் கி.கனகராஜ், முன்னாள் மாவட்ட பொருளாளர் ஓம் பிரகாஷ், கமிட்டி உறுப்பினர் லோகேஷ்வரன் ஆகியோர் கலந்து கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

மேலும், இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நிர்வாகிகள் கார்த்தி, மகேந்திரன், கருப்பசாமி, சுப்ரமணி, அய்யனார், மாதர் சங்கம் சசிகலா, சி.ஐ.டி.யூ நிர்வாகிகள் ஜெகதீசன், ரங்கநாதன், காளிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...