மாணவர்களை யாகபூஜைக்கு அழைத்து சென்ற தனியார் பள்ளி - உடுமலையில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

உடுமலைப்பேட்டையில் தனியார் பள்ளி மாணவர்களை யாக பூஜையில் பங்கேற்க வைத்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களை யாக பூஜைக்கு பள்ளி நிர்வாகம் யாக பூஜைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்றது.



இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உடுமலை ஒன்றிய செயலாளர் தமிழ்த்தென்றல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பள்ளி வேளையில் கல்வி கற்க வேண்டிய மாணவர்களை அரசியல் சாசனத்திற்கு எதிராக மதம் சார்ந்த நிகழ்வில் பங்கெடுக்க வைத்த பள்ளி நிர்வாகத்தின் மீதும் அதற்கு துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்களின் மீது தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் உடனடியாக தீவிர விசாரணை மேற்கொண்டு தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி வளாகங்களில் மதம் சார்ந்த நிகழ்வுகளை அனுமதிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.



ஆர்ப்பாட்டத்தில், இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் பிரவீன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்னாள் தாலுகா செயலாளர் கி.கனகராஜ், முன்னாள் மாவட்ட பொருளாளர் ஓம் பிரகாஷ், கமிட்டி உறுப்பினர் லோகேஷ்வரன் ஆகியோர் கலந்து கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

மேலும், இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நிர்வாகிகள் கார்த்தி, மகேந்திரன், கருப்பசாமி, சுப்ரமணி, அய்யனார், மாதர் சங்கம் சசிகலா, சி.ஐ.டி.யூ நிர்வாகிகள் ஜெகதீசன், ரங்கநாதன், காளிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...