கோவை குறிச்சி குளத்தில் மர்மமான முறையில் இறந்த நிலையில், மிதந்த கட்டிட தொழிலாளி முரளி என்பவரின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை.
கோவை: கோவை, குறிச்சி குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டனர்.

இதனை தொடர்ந்து கைப்பற்றப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் முரளி என்ற கட்டிட தொழிலாளி என்பது தெரியவந்தது. மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போத்தனூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டனர்.
இதனை தொடர்ந்து கைப்பற்றப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் முரளி என்ற கட்டிட தொழிலாளி என்பது தெரியவந்தது. மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போத்தனூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.