பல்லடத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த கார் : உயிர் தப்பிய ஓட்டுநர் - வைரல் வீடியோ!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்றிரவு சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தலைகுப்புறக் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த சம்பவத்தின் வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் சுங்கச்சாவடி அருகே நள்ளிரவில் கார் ஒன்று வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது, அந்தக் கார் திடீரென சுங்கச்சாவடியின் தடுப்பு சுவற்றில் மோதி தலைக்குப்புற கீழே விழுந்து தீ பிடித்து எரிந்தது. இதில் அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர் பயத்தில் உள்ளே சிக்கித் தவித்தார்.



இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் காரில் இருந்த ரிஷிகேஷ் குமாரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



காரில் மளமளவென பற்றியெரிந்துகொண்டிருந்த தீயை, தீயணைப்புத்துறை சிறிது நேரம் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையில் ஓடிய கார் திடீரென தலைகுப்புறக் கவிழ்ந்து தீப்பற்றியெரிந்த இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...