கோவை குனியமுத்தூரில் பேருந்தில் சென்ற ஆசிரியையிடம் செயின் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் அரசு பேருந்தில் சென்ற ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் பரபரப்பு.


கோவை: குனியமூத்தூரில் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஆசிரியையிடம் தங்க செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஈச்சனாரி பகுதியைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி (58). ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியையான இவர், தற்போது குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல பணிக்குச் சென்ற முத்தமிழ் செல்வி அரசு பேருந்தில் பயணம் செய்தார்.

இந்நிலையில் குனியமுத்தூர் பேருந்து நிலையம் வந்து இறங்கி, கழுத்தைக் கவனித்த போது தனது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து முத்தமிழ்ச் செல்வி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.

புகார் அடிப்படையில் வழக்குப் பதிவுச் செய்த போலீசார் செயினை திருடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். கோவை மாநகரில் கடந்த சில தினங்களாகப் பேருந்துகளில் செல்லும் பெண்களைக் குறி வைத்து செயின் திருடும் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...