கோவை குனியமுத்தூரில் அரசு பேருந்தில் சென்ற ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் பரபரப்பு.
கோவை: குனியமூத்தூரில் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஆசிரியையிடம் தங்க செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஈச்சனாரி பகுதியைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி (58). ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியையான இவர், தற்போது குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல பணிக்குச் சென்ற முத்தமிழ் செல்வி அரசு பேருந்தில் பயணம் செய்தார்.
இந்நிலையில் குனியமுத்தூர் பேருந்து நிலையம் வந்து இறங்கி, கழுத்தைக் கவனித்த போது தனது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து முத்தமிழ்ச் செல்வி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.
புகார் அடிப்படையில் வழக்குப் பதிவுச் செய்த போலீசார் செயினை திருடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். கோவை மாநகரில் கடந்த சில தினங்களாகப் பேருந்துகளில் செல்லும் பெண்களைக் குறி வைத்து செயின் திருடும் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோவை ஈச்சனாரி பகுதியைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி (58). ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியையான இவர், தற்போது குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல பணிக்குச் சென்ற முத்தமிழ் செல்வி அரசு பேருந்தில் பயணம் செய்தார்.
இந்நிலையில் குனியமுத்தூர் பேருந்து நிலையம் வந்து இறங்கி, கழுத்தைக் கவனித்த போது தனது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து முத்தமிழ்ச் செல்வி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.
புகார் அடிப்படையில் வழக்குப் பதிவுச் செய்த போலீசார் செயினை திருடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். கோவை மாநகரில் கடந்த சில தினங்களாகப் பேருந்துகளில் செல்லும் பெண்களைக் குறி வைத்து செயின் திருடும் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.