உடுமலை அருகே எஸ்வி புரத்தில் நிழற்கூரை அமைக்கக் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள எஸ்.வி புரத்தில் நிழற்கூரை அமைக்க அதிகாரிகளுக்குச் சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை.


திருப்பூர்: எஸ்.வி புரத்தில் நிழற்கூரை அகற்றப்பட்ட இடத்தில் புதிய நிழற்கூரை அமைக்கக் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை - கொழுமம் சாலையில் உள்ள எஸ்.வி.புரத்தில், நிழற்கூரை இருந்தது. நகரை ஒட்டியுள்ள, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார் கிராம ஊராட்சிகளிலிருந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதைப்பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் அங்கிருந்த பேருந்து நிறுத்த நிழற்கூரை பழுதடைந்து, ஆபத்தான நிலையிலிருந்தது.

இதனையடுத்து, பேருந்து நிறுத்த நிழற்கூரை அகற்றப்பட்டது. ஆனால், புதிதாக நிழற்கூரை அமைக்காமல், பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பேருந்திற்காகக் காத்திருக்கும் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், வெயிலிலும், மழையிலும் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.



மக்கள் சாலையில் காத்திருக்கும் போதும், அதிவேகமாக வரும் வாகனங்களாலும், பேருந்து நிறுத்தம் அடையாளம் இல்லாததால், தாறுமாறாக நிறுத்தப்படும். பேருந்துகளால் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. எனவே, எஸ்.வி.புரத்தில் புதிதாகப் பேருந்து நிறுத்த நிழற்கூரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்து உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...