உடுமலை அருகே எஸ்வி புரத்தில் நிழற்கூரை அமைக்கக் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள எஸ்.வி புரத்தில் நிழற்கூரை அமைக்க அதிகாரிகளுக்குச் சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை.


திருப்பூர்: எஸ்.வி புரத்தில் நிழற்கூரை அகற்றப்பட்ட இடத்தில் புதிய நிழற்கூரை அமைக்கக் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை - கொழுமம் சாலையில் உள்ள எஸ்.வி.புரத்தில், நிழற்கூரை இருந்தது. நகரை ஒட்டியுள்ள, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார் கிராம ஊராட்சிகளிலிருந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதைப்பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் அங்கிருந்த பேருந்து நிறுத்த நிழற்கூரை பழுதடைந்து, ஆபத்தான நிலையிலிருந்தது.

இதனையடுத்து, பேருந்து நிறுத்த நிழற்கூரை அகற்றப்பட்டது. ஆனால், புதிதாக நிழற்கூரை அமைக்காமல், பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பேருந்திற்காகக் காத்திருக்கும் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், வெயிலிலும், மழையிலும் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.



மக்கள் சாலையில் காத்திருக்கும் போதும், அதிவேகமாக வரும் வாகனங்களாலும், பேருந்து நிறுத்தம் அடையாளம் இல்லாததால், தாறுமாறாக நிறுத்தப்படும். பேருந்துகளால் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. எனவே, எஸ்.வி.புரத்தில் புதிதாகப் பேருந்து நிறுத்த நிழற்கூரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்து உள்ளது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...