கோவனூர் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள கோவனூர் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு. ஒருவர் படுகாயம்.


கோவை: கோவனூர் அருகே உள்ள மலைகோவிலுக்கு சென்ற தொழிலாளியை, ஒற்றை யானை தாக்கியதில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சிக்குப்பட்ட கோவனூர் அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி மலைக்கோவிலுக்குக் காலை 7 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த சவுந்தரராஜன் என்பவர் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த ஒற்றை காட்டு யானை சவுந்தரராஜனைத் தாக்கியுள்ளது. இதில் கை முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காகக் கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் திருமாளூரை சேர்ந்த மயில்சாமி என்பவர் ஆடுகளுக்கு இலை பறிக்க கோவனூர் பகுதிக்கு இன்று மாலை 5 மணியளவில் சென்றுள்ளார்.



அப்போது அங்கு வந்த ஒற்றை யானை மயில்சாமியைத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து யானை சென்ற பின் அங்கிருந்த நபர்கள் மயில்சாமி உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் சரக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...