திருப்பூர் உடுமலை அருகே கோவிலுக்கு தானமாக வழங்கிய கன்றுகளுக்கு அம்மை நோய் தாக்குதல்..!

உடுமலை அடுத்த சோமவார்பட்டியில் உள்ள ஆல் கொண்ட மால கோவிலுக்கு பக்தர்கள் தானமாக வழங்கிய கன்றுகளுக்கு அம்மை நோய் தாக்கிய நிலையில், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளித்து கண்காணிப்பு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள சோமவார்பட்டியில் உள்ள ஆல் கொண்ட மால கோவிலுக்கு பக்தர்கள் கன்றுகளை தானமாக வழங்குவது வழக்கம். பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கடந்த 16ஆம் தேதி முதல் கோவிலுக்கு வந்து கன்றுகளை தானமாக கொடுக்கத் தொடங்கினர்.

இவ்வாறு பெறப்படும் கன்றுகளுக்கு பராமரிப்பு கட்டணமாக ஆயிரம் ரூபாய் கோவில் நிர்வாகத்தினர் வசூலித்து வந்தனர். இந்த நிலையில் தானமாக வழங்கப்பட்ட கன்றுகளுக்கு அம்மை நோய் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து நோய் தாக்குதலுக்கு உள்ளான கன்றுகளை தனிமைப்படுத்திய கோவில் நிர்வாகத்தினர், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் கடந்த 2 நாட்களாக சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவில் நிர்வாகத்தினர், தானமாக பெறப்பட்ட கன்றுகளின் எண்ணிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவலை வெளியிடவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும், திருவிழா ஏற்பாடுகளில் குளறுபடி, கூடுதல் நுழைவு கட்டணம் வசூல் மற்றும் கன்றுகள் பராமரிப்பில் குழப்பம் ஏற்படுத்திய கோவில் நிர்வாகத்தை கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...