தாராபுரத்தில் சிலம்பம் சுற்றி அசத்திய மாணவ-மாணவியர் - பார்வையாளர்கள் உற்சாகம்!

பொங்கல் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரத்தில் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிலம்பம் சுற்றினர்.


திருப்பூர்: பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்று சிலம்பம். பல நூறு ஆண்டுகள் பழமையான இந்த விளையாட்டை ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழர்களின் மரபுக் கலைகளில் ஒன்றாக போற்றி பாதுகாக்கப்பட்டு வரும் சிலம்பாட்டம், தற்காப்பு கலையாக இருப்பதுடன், உடல் மற்றும் மன நலனுக்கு உத்வேகம் அளிக்கும் உகந்த சிறப்பான கலையாக திகழ்கிறது.

இந்தக் கலையை சிறியவர் முதல் பெரியவர் வரை வயது பேதம் இன்றி அனைவரும் கற்றுக்கொண்டு உடல் மற்றும் மன நலனை பேணி காப்பது இன்றைய வாழ்வியலுக்கு மிகவும் அவசியமாக உள்ளது.



அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி சிலம்பு தற்காப்பு கலை செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ மதுரை வீரன் சிலம்பு பயிற்சி கூடத்தில் 46 வது ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில், இந்திய ஆர்ட்ஸின் சிலம்பம் தற்காப்பு கலை செயல் விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. தாராபுரம் புது காவல் நிலைய வீதியில் முருகன் கோவில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிலம்பு பயிற்சியாளர் மோகன் தலைமையேற்று நடத்தினர்.



இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். சிலம்பம் சுற்றியும், தீபம் சுற்றியும், கத்திச்சண்டை போட்டும் மாணவ-மாணவியர் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...