பொங்கல் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரத்தில் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிலம்பம் சுற்றினர்.
திருப்பூர்: பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்று சிலம்பம். பல நூறு ஆண்டுகள் பழமையான இந்த விளையாட்டை ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழர்களின் மரபுக் கலைகளில் ஒன்றாக போற்றி பாதுகாக்கப்பட்டு வரும் சிலம்பாட்டம், தற்காப்பு கலையாக இருப்பதுடன், உடல் மற்றும் மன நலனுக்கு உத்வேகம் அளிக்கும் உகந்த சிறப்பான கலையாக திகழ்கிறது.
இந்தக் கலையை சிறியவர் முதல் பெரியவர் வரை வயது பேதம் இன்றி அனைவரும் கற்றுக்கொண்டு உடல் மற்றும் மன நலனை பேணி காப்பது இன்றைய வாழ்வியலுக்கு மிகவும் அவசியமாக உள்ளது.

அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி சிலம்பு தற்காப்பு கலை செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ மதுரை வீரன் சிலம்பு பயிற்சி கூடத்தில் 46 வது ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில், இந்திய ஆர்ட்ஸின் சிலம்பம் தற்காப்பு கலை செயல் விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. தாராபுரம் புது காவல் நிலைய வீதியில் முருகன் கோவில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிலம்பு பயிற்சியாளர் மோகன் தலைமையேற்று நடத்தினர்.

இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். சிலம்பம் சுற்றியும், தீபம் சுற்றியும், கத்திச்சண்டை போட்டும் மாணவ-மாணவியர் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
இந்தக் கலையை சிறியவர் முதல் பெரியவர் வரை வயது பேதம் இன்றி அனைவரும் கற்றுக்கொண்டு உடல் மற்றும் மன நலனை பேணி காப்பது இன்றைய வாழ்வியலுக்கு மிகவும் அவசியமாக உள்ளது.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி சிலம்பு தற்காப்பு கலை செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ மதுரை வீரன் சிலம்பு பயிற்சி கூடத்தில் 46 வது ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில், இந்திய ஆர்ட்ஸின் சிலம்பம் தற்காப்பு கலை செயல் விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. தாராபுரம் புது காவல் நிலைய வீதியில் முருகன் கோவில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிலம்பு பயிற்சியாளர் மோகன் தலைமையேற்று நடத்தினர்.
இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். சிலம்பம் சுற்றியும், தீபம் சுற்றியும், கத்திச்சண்டை போட்டும் மாணவ-மாணவியர் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.