கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை தீவிரம் - 4,393 பேருக்கு சோதனை

கோவை விமானநிலையத்தில் ஜன.1ம் தேதி முதல் இதுவரை 4ஆயிரத்து 393 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



கோவை: சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கோவை பன்னாட்டு விமான நிலையத்துக்குவரும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டு ரேண்டம் அடிப்படையில் 2 சதவீதம் பயணிகளிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.

கோவை விமான நிலையத்துக்கு சிங்கப்பூா், ஷாா்ஜா ஆகிய பகுதிகளில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. ஷாா்ஜாவில் இருந்து ஜனவரி 16-ந் தேதி கோவை விமான நிலையம் வந்த பயணிகளில் ரேண்டம் அடிப்படையில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் நாமக்கல் மாவட்டம், காளப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்த 38 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்து, நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு சம்பந்தப்பட்டவரின் விவரங்கள் கோவை மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர, கோவை விமான நிலையத்தில் ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இதுவரை எடுக்கப்பட்ட பரிசோதனையில், இதுவரை 3 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து கோவை சுகாதாரத் துறை துணை இயக்குநா் அருணா கூறியதாவது:-

கோவை விமான நிலையத்தில் கடந்த ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இதுவரை 4,393 பேருக்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், 148 பேரிடம் இருந்து ரேண்டம் அடிப்படையில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவா்களில் கோவை, திருப்பூா் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சோ்ந்த தலா ஒருவா் வீதம் 3 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த டிசம்பா் மாதத்தில் இருந்து பரிசோதனை செய்யப்பட்டதில் 6 பேருக்கு மட்டுமே கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், கோவை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 3 போ், சேலம், நாமக்கல் மற்றும் திருப்பூா் மாவட்டங்களை சோ்ந்த தலா ஒருவா்.

இதில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவரைத் தவிா்த்து மற்ற அனைவருக்கும் புதிய வகை கொரோன நோய்த் தொற்று பாதிப்பில்லை என்ற முடிவுகள் பெறப்பட்டுள்ளன. நாமக்கல்லை சோ்ந்தவரின் சளி மாதிரிகள் புதிய வகை கொரோனா நோய்த் தொற்று கண்டறிவதற்காக சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...