கோவையில் ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் பலி - போலீசார் விசாரணை

சிங்காநல்லூர் அடுத்த சோமனூர் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து ரயில்வே போலீசார் விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூரை அருகே சோமனூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு அருகேயுள்ள தண்டவாளத்தில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது.

இதுதொடர்பாக அவ்வழியாக சென்றவர்கள், ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் போத்தனூர் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் சபரி ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.



இதையடுத்து அடையாளம் தெரியாத நபரின் உடலை கைப்பற்றிய ரயில்வே காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நபர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ள போலீசார், ரயில் மோதி இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த நபர் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களை கொண்ட கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...