கோவையில் ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் பலி - போலீசார் விசாரணை

சிங்காநல்லூர் அடுத்த சோமனூர் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து ரயில்வே போலீசார் விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூரை அருகே சோமனூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு அருகேயுள்ள தண்டவாளத்தில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது.

இதுதொடர்பாக அவ்வழியாக சென்றவர்கள், ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் போத்தனூர் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் சபரி ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.



இதையடுத்து அடையாளம் தெரியாத நபரின் உடலை கைப்பற்றிய ரயில்வே காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நபர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ள போலீசார், ரயில் மோதி இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த நபர் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களை கொண்ட கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...