கோவையில் ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் பலி - போலீசார் விசாரணை

சிங்காநல்லூர் அடுத்த சோமனூர் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து ரயில்வே போலீசார் விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூரை அருகே சோமனூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு அருகேயுள்ள தண்டவாளத்தில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது.

இதுதொடர்பாக அவ்வழியாக சென்றவர்கள், ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் போத்தனூர் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் சபரி ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.



இதையடுத்து அடையாளம் தெரியாத நபரின் உடலை கைப்பற்றிய ரயில்வே காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நபர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ள போலீசார், ரயில் மோதி இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த நபர் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களை கொண்ட கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...