பல்லடம் அருகே சித்தம்பலத்தில் இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்குச் சிறப்பு அபிஷேக பூஜை.
திருப்பூர்: பல்லடம் அருகே சித்தம்பலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோளாறு நவகிரக கோட்டை ஸ்தலத்தில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்புப் பூஜை நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலத்தில் பிரசித்தி பெற்ற கோளாறு நவகிரக கோட்டை ஸ்தலம் உள்ளது.
இங்கு ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனியாகச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி திருக்கணித பஞ்சாகப்படி இன்று சனீஸ்வர பகவான் மகரம் ராசியிலிருந்து கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.
இதனையடுத்து கோளாறுபதி நவகிரக கோட்டையில் சனீஸ்வரன் பகவானுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை பூஜைகள் நடைபெற்றன. மேலும் பக்தர்கள் முன்னிலையில் வேள்வி யாகங்கள் நடத்தப்பட்டன.
சிறப்புப் பூஜையில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அங்கு வந்த பக்தர்கள் சிறப்புப் பரிகார பூஜையில் கலந்து கொண்டு எள் தீபம் ஏற்றி சனீஸ்வர பகவானை வழிபாடு செய்தனர்.