கோவை மாவட்டம், வால்பாறை குடியிருப்பு பகுதிக்கு நுழைந்த சிறுத்தை பூனையே கொன்று தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சி வேகமாக பரவி வருகிறது.
கோவை: வால்பாறை குடியிருப்பு பகுதிக்கு நுழைந்த சிறுத்தை பூனையே கொன்று தூக்கிச் செல்லும் வீடியோ வெளியாகி பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்ட அதிகரித்து வருகிறது. யானை, புலி, சிறுத்தை,காட்டெருமை கரடி போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் வந்து செல்கின்றன.
சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீட்டில் வளர்க்கும் நாய், கோழி, பூனை, ஆடு, போன்றவைகளை வேட்டையாடி செல்கின்றது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் வால்பாறை கூட்டுறவு காலனி பகுதியில் அமரேஷ் என்பவர் வீட்டில் வளர்த்த பூனை இரண்டு நாளாகக் காணவில்லை என்று அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர்.
அருகே உள்ள வீட்டில் பொருத்திய சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்து உள்ளனர். சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் வந்து பூனையைக் கொன்று தூக்கிச் செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் உலாவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.