நீலகிரியில் களைகட்டிய காணும் பொங்கல் கொண்டாட்டம் - ஊட்டியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்..!

காணும் பொங்கலையொட்டி உதகைக்கு குடும்பம் குடும்பமாக படையெடுத்துள்ள சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.



நீலகிரி: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் பொங்கல் விடுமுறை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை என்பது வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.



இந்த நிலையில் காணும் பொங்கல் தினமான இன்றும் சுற்றுலா பயணிகள் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை காண குவிந்து வருகின்றனர்.



குறிப்பாக குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்காவில் சென்று கண்ணாடி மாளிகையை கண்டு ரசிப்பதுடன் கிக்யூ புல்வெளிகளிலும் அமர்ந்து குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ச்சியுடன் திரும்பி செல்கின்றனர்.

அதேபோல உதகை படகு இல்லத்தில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் மிதிபடகு, துடுப்பு படகு மற்றும் மோட்டார் படகுகளில் சவாரி செய்து உற்சாகத்துடன் செல்கின்றனர்.



இதே போல ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா காட்சி முனைக்கு வந்த வண்ணமாக இருப்பதால் காலை முதலே தொட்டபெட்டா சாலையில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.



இதன் காரணமாக சுற்றுலா தலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் காவல்துறை கண்காணிப்பு பணியை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...