நீலகிரியில் களைகட்டிய காணும் பொங்கல் கொண்டாட்டம் - ஊட்டியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்..!

காணும் பொங்கலையொட்டி உதகைக்கு குடும்பம் குடும்பமாக படையெடுத்துள்ள சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.



நீலகிரி: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் பொங்கல் விடுமுறை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை என்பது வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.



இந்த நிலையில் காணும் பொங்கல் தினமான இன்றும் சுற்றுலா பயணிகள் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை காண குவிந்து வருகின்றனர்.



குறிப்பாக குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்காவில் சென்று கண்ணாடி மாளிகையை கண்டு ரசிப்பதுடன் கிக்யூ புல்வெளிகளிலும் அமர்ந்து குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ச்சியுடன் திரும்பி செல்கின்றனர்.

அதேபோல உதகை படகு இல்லத்தில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் மிதிபடகு, துடுப்பு படகு மற்றும் மோட்டார் படகுகளில் சவாரி செய்து உற்சாகத்துடன் செல்கின்றனர்.



இதே போல ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா காட்சி முனைக்கு வந்த வண்ணமாக இருப்பதால் காலை முதலே தொட்டபெட்டா சாலையில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.



இதன் காரணமாக சுற்றுலா தலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் காவல்துறை கண்காணிப்பு பணியை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...