கோவையில் காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 15ஆவது வார்டில் காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 15ஆவது வார்டில் காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பச்சைமுத்து தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 100 பெண்களுக்கு அரிசி, வெல்லம், மஞ்சள், கரும்பு மற்றும் புடவை அடங்கிய பொங்கல் பரிசு பையை அக்கட்சியினர் வழங்கினர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 15ஆவது வார்டில் உள்ள சுப்பிரமணியம் பாளையம் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பச்சைமுத்து தலைமை தாங்கினார்.



இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் வண்ணக் கோலமிட்ட பொங்கல் பானை வைத்து தீ மூட்டி, அது பொங்கிவரும் போது குலவையிட்டுப் பொங்கல் வைத்து வழிபட்டனர்.



இதைத்தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 100 பெண்களுக்குப் புடவை, அரிசி, வெள்ளம், மஞ்சள், கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுப் பையினை மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சை முத்து வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷேக் அப்துல்காதர், நிர்வாகிகள் மெளவுனசாமி, சின்ன ராமகிருஷ்ணன், சுரேந்திரபாபு, செந்தில், ரகுபதி, மணி, நடராஜ, சிங்காரம், மேரி, சங்கீதா, சிரவை நடராஜன், காளிச் சாமி, தேவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...