கோவையில் காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 15ஆவது வார்டில் காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 15ஆவது வார்டில் காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பச்சைமுத்து தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 100 பெண்களுக்கு அரிசி, வெல்லம், மஞ்சள், கரும்பு மற்றும் புடவை அடங்கிய பொங்கல் பரிசு பையை அக்கட்சியினர் வழங்கினர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 15ஆவது வார்டில் உள்ள சுப்பிரமணியம் பாளையம் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பச்சைமுத்து தலைமை தாங்கினார்.



இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் வண்ணக் கோலமிட்ட பொங்கல் பானை வைத்து தீ மூட்டி, அது பொங்கிவரும் போது குலவையிட்டுப் பொங்கல் வைத்து வழிபட்டனர்.



இதைத்தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 100 பெண்களுக்குப் புடவை, அரிசி, வெள்ளம், மஞ்சள், கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுப் பையினை மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சை முத்து வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷேக் அப்துல்காதர், நிர்வாகிகள் மெளவுனசாமி, சின்ன ராமகிருஷ்ணன், சுரேந்திரபாபு, செந்தில், ரகுபதி, மணி, நடராஜ, சிங்காரம், மேரி, சங்கீதா, சிரவை நடராஜன், காளிச் சாமி, தேவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...