கோவை கவுண்டம்பாளையம் அருகே கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கு - இருவர் கைது..!

கவுண்டம்பாளையம் அருகே நண்பரை சந்திக்க காத்திருந்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த கார்த்திக் மற்றும் கௌதம் ஆகிய இருவரை துடியலூர் போலீசார் கைது செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடேசன். கூலித் தொழிலாளியான இவர், தனது நண்பரை சந்திப்பதற்காக கவுண்டம்பாளையத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், அப்பகுதியில் பெஸ்ட் ஆட்டோ எலக்ட்ரிகல்ஸ் கடை முன்பு காத்திருந்துள்ளார். அவர், செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 2 பேர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பாக்கெட்டில் இருந்த 500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.



இது தொடர்பாக நடேசன் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் கௌதம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...