கோவை கவுண்டம்பாளையம் அருகே கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கு - இருவர் கைது..!

கவுண்டம்பாளையம் அருகே நண்பரை சந்திக்க காத்திருந்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த கார்த்திக் மற்றும் கௌதம் ஆகிய இருவரை துடியலூர் போலீசார் கைது செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடேசன். கூலித் தொழிலாளியான இவர், தனது நண்பரை சந்திப்பதற்காக கவுண்டம்பாளையத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், அப்பகுதியில் பெஸ்ட் ஆட்டோ எலக்ட்ரிகல்ஸ் கடை முன்பு காத்திருந்துள்ளார். அவர், செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 2 பேர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பாக்கெட்டில் இருந்த 500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.



இது தொடர்பாக நடேசன் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் கௌதம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...