கோவை கவுண்டம்பாளையம் அருகே கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கு - இருவர் கைது..!

கவுண்டம்பாளையம் அருகே நண்பரை சந்திக்க காத்திருந்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த கார்த்திக் மற்றும் கௌதம் ஆகிய இருவரை துடியலூர் போலீசார் கைது செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடேசன். கூலித் தொழிலாளியான இவர், தனது நண்பரை சந்திப்பதற்காக கவுண்டம்பாளையத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், அப்பகுதியில் பெஸ்ட் ஆட்டோ எலக்ட்ரிகல்ஸ் கடை முன்பு காத்திருந்துள்ளார். அவர், செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 2 பேர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பாக்கெட்டில் இருந்த 500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.



இது தொடர்பாக நடேசன் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் கௌதம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...