நீலகிரியில் ரூ.40 லட்சம் மதிப்பு புகையிலைப்பொருட்கள் கடத்தல் - ஓட்டுநர் கைது

நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக லாரி மூலம் கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரளாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை.


நீலகிரி: கர்நாடகா மாநிலத்தில் இருந்து நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள கூடலூர் வழியாக தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால், நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு தமிழக பதிவு எண் கொண்ட லாரி ஒன்றில், பிஸ்கட்டுகளுடன் சேர்த்து தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்களில் ஒன்றான ஹான்ஸ் கடத்தப்படுவதாக கூடலூர் காவல்துறையினரக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தொரப்பள்ளி சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்தபோது, கர்நாடகா மாநிலத்தில் இருந்து சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக, லாரி மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.



மேலும், லாரியை ஓட்டிவந்த கேரளாவை சேர்ந்த சுதிர் என்பவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...