நீலகிரியில் ரூ.40 லட்சம் மதிப்பு புகையிலைப்பொருட்கள் கடத்தல் - ஓட்டுநர் கைது

நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக லாரி மூலம் கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரளாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை.


நீலகிரி: கர்நாடகா மாநிலத்தில் இருந்து நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள கூடலூர் வழியாக தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால், நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு தமிழக பதிவு எண் கொண்ட லாரி ஒன்றில், பிஸ்கட்டுகளுடன் சேர்த்து தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்களில் ஒன்றான ஹான்ஸ் கடத்தப்படுவதாக கூடலூர் காவல்துறையினரக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தொரப்பள்ளி சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்தபோது, கர்நாடகா மாநிலத்தில் இருந்து சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக, லாரி மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.



மேலும், லாரியை ஓட்டிவந்த கேரளாவை சேர்ந்த சுதிர் என்பவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...