பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா

கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.


கோவை: கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரி வளாகத்தில் பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் மற்றும் மத நல்லிணக்க விழா நடைபெற்றது.



இந்த விழாவில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



அப்பொழுது அவர் பேசியதாவது, எல்லா சமயத்தவரும் ஒன்று சேர்ந்து சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பொங்கல் விழா கொண்டாடியது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்த அரங்கத்தில் பல்வேறு சமயம் சார்ந்த மக்கள் அமர்ந்திருப்பதை, பார்க்கும்போது இந்தியாவில் சிறப்பு இயலாகும்.இங்குப் பயிலும் மாணவ, மாணவிகள் வருங்காலத்தில் பட்டம் பெற்று ஒரு சிறந்த அதிகாரிகளாகவும், அரசியல்வாதிகளாகவும், சிறந்த வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், வருவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.



இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சமூக சேவையில் ஈடுபட்ட சமூக பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.



மேலும் பொங்கல் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளையும், கல்வி ஊக்கத்தொகையும் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் பல் சமய நல்லுற இயக்கத்தின் தலைவர் ஹாஜி ஜெ. முகமது ரஃபி, ஒருங்கிணைப்பாளர் எம் எம் ராமசாமி, பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியின் தலைவர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை சுன்னத் ஜமாத் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஹாஜி எம் எ இணையத்துல்லா, மறை மாவட்ட முதன்மை குரு தூய மைக்கல் அதிதூதர் பேராலய அருள் தந்தை ஜார்ஜ் தனசேகர், ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் மௌலவி அப்துல் ரஹீம் இந்தாதி, மௌலவி அப்துல் மாலிக் சிராஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...