கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
கோவை: கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரி வளாகத்தில் பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் மற்றும் மத நல்லிணக்க விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்பொழுது அவர் பேசியதாவது, எல்லா சமயத்தவரும் ஒன்று சேர்ந்து சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பொங்கல் விழா கொண்டாடியது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
இந்த அரங்கத்தில் பல்வேறு சமயம் சார்ந்த மக்கள் அமர்ந்திருப்பதை, பார்க்கும்போது இந்தியாவில் சிறப்பு இயலாகும்.இங்குப் பயிலும் மாணவ, மாணவிகள் வருங்காலத்தில் பட்டம் பெற்று ஒரு சிறந்த அதிகாரிகளாகவும், அரசியல்வாதிகளாகவும், சிறந்த வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், வருவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சமூக சேவையில் ஈடுபட்ட சமூக பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் பொங்கல் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளையும், கல்வி ஊக்கத்தொகையும் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பல் சமய நல்லுற இயக்கத்தின் தலைவர் ஹாஜி ஜெ. முகமது ரஃபி, ஒருங்கிணைப்பாளர் எம் எம் ராமசாமி, பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியின் தலைவர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை சுன்னத் ஜமாத் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஹாஜி எம் எ இணையத்துல்லா, மறை மாவட்ட முதன்மை குரு தூய மைக்கல் அதிதூதர் பேராலய அருள் தந்தை ஜார்ஜ் தனசேகர், ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் மௌலவி அப்துல் ரஹீம் இந்தாதி, மௌலவி அப்துல் மாலிக் சிராஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த விழாவில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்பொழுது அவர் பேசியதாவது, எல்லா சமயத்தவரும் ஒன்று சேர்ந்து சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பொங்கல் விழா கொண்டாடியது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
இந்த அரங்கத்தில் பல்வேறு சமயம் சார்ந்த மக்கள் அமர்ந்திருப்பதை, பார்க்கும்போது இந்தியாவில் சிறப்பு இயலாகும்.இங்குப் பயிலும் மாணவ, மாணவிகள் வருங்காலத்தில் பட்டம் பெற்று ஒரு சிறந்த அதிகாரிகளாகவும், அரசியல்வாதிகளாகவும், சிறந்த வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், வருவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சமூக சேவையில் ஈடுபட்ட சமூக பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும் பொங்கல் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளையும், கல்வி ஊக்கத்தொகையும் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பல் சமய நல்லுற இயக்கத்தின் தலைவர் ஹாஜி ஜெ. முகமது ரஃபி, ஒருங்கிணைப்பாளர் எம் எம் ராமசாமி, பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியின் தலைவர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை சுன்னத் ஜமாத் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஹாஜி எம் எ இணையத்துல்லா, மறை மாவட்ட முதன்மை குரு தூய மைக்கல் அதிதூதர் பேராலய அருள் தந்தை ஜார்ஜ் தனசேகர், ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் மௌலவி அப்துல் ரஹீம் இந்தாதி, மௌலவி அப்துல் மாலிக் சிராஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.