கோவையில் பன்றி, பறவைக் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்

கோவையில் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் மற்றும் பறவைக் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம், நாகம்மா நாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது.



கோவை: மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை பாதுகாப்பு சிறப்பு முகாம், கோவை மாவட்டம், பட்டினம் ஊராட்சி நாகம்மா நாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது. இதில்,கோவை மண்டல கால்நடை துறை இணை இயக்குநர் டாக்டர் பெருமாள் சாமி, துணை இயக்குனர் டாக்டர் இளங்கோ, பட்டணம் ஊராட்சிமன்ற தலைவர் கோமதி செல்வகுமார் ஆகியோர் தலைமை வைத்தனர்.



இந்த முகாமில், மருத்துவர்கள் இருகூர் செல்வராணி, மங்கையர்கரசி, மாலதி தேவி, ராமநாதபுரம் மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.



இந்த முகாமில் பட்டணம் ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கிராம மக்களும் தங்களது ஆடு, மாடு கோழி மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு முகாமில் சிகிச்சை பெற்றனர்.

இதேபோல் கோவை மாவட்டம் முழுவதும் ஜனவரி மாதம் மற்றும் பிப்ரவரி மாதம் அன்னூர் கிணத்துக்கடவு பொள்ளாச்சி தொண்டாமுத்தூர் விநாயகம்பாளையம் காரமடை உள்பட கோவை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் இந்த முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல், பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...