கோவையில் பன்றி, பறவைக் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்

கோவையில் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் மற்றும் பறவைக் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம், நாகம்மா நாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது.



கோவை: மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை பாதுகாப்பு சிறப்பு முகாம், கோவை மாவட்டம், பட்டினம் ஊராட்சி நாகம்மா நாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது. இதில்,கோவை மண்டல கால்நடை துறை இணை இயக்குநர் டாக்டர் பெருமாள் சாமி, துணை இயக்குனர் டாக்டர் இளங்கோ, பட்டணம் ஊராட்சிமன்ற தலைவர் கோமதி செல்வகுமார் ஆகியோர் தலைமை வைத்தனர்.



இந்த முகாமில், மருத்துவர்கள் இருகூர் செல்வராணி, மங்கையர்கரசி, மாலதி தேவி, ராமநாதபுரம் மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.



இந்த முகாமில் பட்டணம் ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கிராம மக்களும் தங்களது ஆடு, மாடு கோழி மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு முகாமில் சிகிச்சை பெற்றனர்.

இதேபோல் கோவை மாவட்டம் முழுவதும் ஜனவரி மாதம் மற்றும் பிப்ரவரி மாதம் அன்னூர் கிணத்துக்கடவு பொள்ளாச்சி தொண்டாமுத்தூர் விநாயகம்பாளையம் காரமடை உள்பட கோவை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் இந்த முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல், பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...