கோவையில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பேருந்து இயக்கம்

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேருந்தினை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார்.


கோவை: நாடு முழுவதும் ஜனவரி 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் சாலை விபத்துகளை குறைப்பதற்காகவும் உயிரை காப்பாற்றுவதற்காகவும் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.



அதன்படி, இந்த வருடம் இன்று முதல் 17 ஆம் தேதி வரை அரசு சார்பில் சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, கோவையில் காந்திபுரம் மாநகர பேருந்து நிலையத்தில், சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேருந்தினை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.



மேலும், பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அப்போது அவர் வழங்கினார். இந்தப் பேருந்தானது இந்த ஒரு வாரத்திற்கு கோவை மாநகரில் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

அதேசமயம், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு காந்திபுரம் சிக்னலில் தனியார் மகளிர் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. அதில் மாணவிகள் சாலை விதிமுறைகள் குறித்து முகத்தில் ஓவியம் வரைந்தும், பதாகைகளை ஏந்தியும், பிரசுரங்கள் வழங்கியும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...