சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேருந்தினை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார்.
கோவை: நாடு முழுவதும் ஜனவரி 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் சாலை விபத்துகளை குறைப்பதற்காகவும் உயிரை காப்பாற்றுவதற்காகவும் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

அதன்படி, இந்த வருடம் இன்று முதல் 17 ஆம் தேதி வரை அரசு சார்பில் சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, கோவையில் காந்திபுரம் மாநகர பேருந்து நிலையத்தில், சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேருந்தினை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும், பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அப்போது அவர் வழங்கினார். இந்தப் பேருந்தானது இந்த ஒரு வாரத்திற்கு கோவை மாநகரில் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
அதேசமயம், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு காந்திபுரம் சிக்னலில் தனியார் மகளிர் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. அதில் மாணவிகள் சாலை விதிமுறைகள் குறித்து முகத்தில் ஓவியம் வரைந்தும், பதாகைகளை ஏந்தியும், பிரசுரங்கள் வழங்கியும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அதன்படி, இந்த வருடம் இன்று முதல் 17 ஆம் தேதி வரை அரசு சார்பில் சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, கோவையில் காந்திபுரம் மாநகர பேருந்து நிலையத்தில், சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேருந்தினை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அப்போது அவர் வழங்கினார். இந்தப் பேருந்தானது இந்த ஒரு வாரத்திற்கு கோவை மாநகரில் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
அதேசமயம், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு காந்திபுரம் சிக்னலில் தனியார் மகளிர் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. அதில் மாணவிகள் சாலை விதிமுறைகள் குறித்து முகத்தில் ஓவியம் வரைந்தும், பதாகைகளை ஏந்தியும், பிரசுரங்கள் வழங்கியும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.