'கோடங்கிபாளையத்தில் கல்குவாரி அமைக்கலாமா..?' - மக்களுடன் திருப்பூர் ஆட்சியர் ஆலோசனை!

திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையம் பகுதியில் கல்குவாரி அமைப்பது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வினீத் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையம் பகுதியில் கல்குவாரி அமைப்பது தொடர்பான கருத்துக்கணிப்பு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது.



இதில் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் பல்லடம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், கல்குவாரி அமைக்கப்படுவதால் தங்களது விவசாயம் பாதிக்கப்படும் எனவும், கால்நடைகள் வளர்ப்பதும் கேள்விக்குறியாகும் என்பதால் கல்குவாரி அமைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.



கல்குவாரி உரிமையாளர்கள் சார்பில், குவாரி அமைப்பதால், விவசாயத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பாதுகாப்பு முறைகளும் பின்பற்றியே அமைக்கப்பட இருப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு மேற்கொண்டு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.



இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் வினீத், அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...