'கோடங்கிபாளையத்தில் கல்குவாரி அமைக்கலாமா..?' - மக்களுடன் திருப்பூர் ஆட்சியர் ஆலோசனை!

திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையம் பகுதியில் கல்குவாரி அமைப்பது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வினீத் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையம் பகுதியில் கல்குவாரி அமைப்பது தொடர்பான கருத்துக்கணிப்பு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது.



இதில் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் பல்லடம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், கல்குவாரி அமைக்கப்படுவதால் தங்களது விவசாயம் பாதிக்கப்படும் எனவும், கால்நடைகள் வளர்ப்பதும் கேள்விக்குறியாகும் என்பதால் கல்குவாரி அமைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.



கல்குவாரி உரிமையாளர்கள் சார்பில், குவாரி அமைப்பதால், விவசாயத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பாதுகாப்பு முறைகளும் பின்பற்றியே அமைக்கப்பட இருப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு மேற்கொண்டு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.



இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் வினீத், அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...