சித்த மருத்துவ தினம் - கோவையில் சித்தா விழிப்புணர்வு மூலிகை கண்காட்சி!

சித்த மருத்துவத்தின் தந்தையான அகத்தியர் பிறந்தநாளான இன்று சித்த மருத்துவ தினத்தையொட்டி கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சித்தா குறித்து விழிப்புணர்வு மூலிகை கண்காட்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.


கோவை: சித்த மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் அகத்தியரின் பிறந்த தினமான இன்று சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது. சித்தர்களில் முதன்மையாக போற்றப்படும் 18 சித்தர்களில் முதல் சித்தராக கருதப்படுபவர் அகத்தியர்.



தமிழ் மருத்துவத்தை முதல்நிலைப்படுத்தி பல சிகிச்சை முறைகளை ஏற்படுத்தி சித்த மருத்துவத்தை தோற்றுவித்தார். உடல் கூறுகள், உடல் செயலியல், அறுவை சிகிச்சை, மன நோய்கள், மந்திரம், தந்திரம், வைத்தியம், யோகம், நோய் கணிப்பு, தத்துவம் என அனைத்திலும் நிபுணத்துவம் பெற்றவர் அகத்தியர்.

அகத்தியரைப் பற்றிய குறிப்புகளும் கல்வெட்டுகளும் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் காணப்படுகின்றன. கம்போடியா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, இந்தோனேஷியா, வியட்நாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் காணப்படுகின்றன.



தமிழ் மரபின் மருத்துவ மகிமையை உலகம் அறிய செய்த அகத்தியர் பிறந்த நாளான இன்று தேசிய சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் சித்தா தினத்தை முன்னிட்டு சித்த மருத்துவ நிறுவனங்கள், மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுடன் இணைந்து மூலிகை கண்காட்சிகள், மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு பேரணிகள், கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகள் பயிற்சி பட்டறைகள் நடைபெற்று வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சித்தா துறை சார்பில், சித்த மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில், சித்த மருத்துவத்துக்கான கடுக்காய், ஜாதிக்காய், சுக்கு , மிளகு, திப்பிலி, முடக்கத்தான் , வல்லாரை, பொன்னாங்கண்ணி உள்ளிட்ட மூலிகை மற்றும் பச்சை தாவரங்களை காட்சிப்படுத்தப்பட்டன.

உலகில் சுகாதார துறைக்கு நெருக்கடி மற்றும் பேரிடர் ஏற்படுகின்ற காலங்களில் பெரும் சவால்களை சித்த மருந்துகள் சமாளித்து உயிரை காத்திருக்கின்றன.

அதற்கு சான்றாக சமீபத்தில் அமைந்திருப்பது கபசுர குடிநீர். கொரோனா பேரிடரில் தடுப்பூசி கிடைக்காத நிலையில் உடலில் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தவும், கோவிட் சிகிச்சை பெற்றவர்களுக்கு உடல் நலம் பெறவும் பெரிதும் உதவியது சித்த மருந்தான கபசுர குடிநீர்.

இந்த நிலையில் சித்த மருத்துவம் உடல் நலத்துக்கு பக்க விளைவை ஏற்படுத்தாது என்பதனாலும், மகத்தான மருந்தாக உட்கொண்டு பொதுமக்கள் பயனடைகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...