ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு - கோவையில் ஆளுநர் உருவபொம்மை எரிப்பு போராட்டம்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என், ரவியை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், ஆளுநரின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியபோது, தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என அழைக்கலாம் என்று கூறியது அரசியல் கட்சியினர், மொழிப்பற்றாளர்கள் என பல தரப்பினரின் விமர்சனத்திற்கும் உள்ளானது.

அதேபோல் நேற்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டின முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேரவை நிகழ்ச்சி முடியும் முன்பே, அவையிலிருந்து ஆளுநர் வெளியேறிய சம்பவம் சர்ச்சைக்குள்ளானது.

இதனையடுத்து, தமிழ்நாட்டிற்கான ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் ஆளுநருக்கு எதிரான கண்டனப்பதிவுகளும் முன்வைக்கப்பட்டுவருகின்றன.



அதன் ஒரு பகுதியாக, கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தியும், அவரது நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கழகத்தின் அமைப்பு செயலாளர் ஆறுசாமி தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்று மத்திய அரசு மற்றும் ஆளுநருக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர், ஆளுநரின் உருவ பொம்மையை எரித்ததால், அவர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது தபெதிக அமைப்பு செயலாளர் ஆறுமுகசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பல்வேறு போராட்டங்களுக்கு பின், தமிழ்நாடு என பெயர் வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநரோ, தமிழ்நாடு என்ற பெயரை சொல்லுவதற்குக்கூட தயங்குகிறார்.

ஆந்திர பிரதேசம் மத்திய பிரதேசம் போன்றவற்றில் இருக்கக்கூடிய பிரதேசம் என்கின்ற சொல்லும் நாட்டை குறிப்பதுதான். தமிழ்நாடு என்று சொல்ல மாட்டேன் என ஆளுநர் கூறுவதை கண்டித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

ஆளுநர், சமூக நீதி, பெண் உரிமை, பெரியார் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெயர்களைக்கூற மறுப்பத்தைக் கண்டித்தே அவரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே அவர் எழுந்து சென்றது ஜனநாயக மரபு அல்ல

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...