ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு - கோவையில் ஆளுநர் உருவபொம்மை எரிப்பு போராட்டம்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என், ரவியை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், ஆளுநரின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியபோது, தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என அழைக்கலாம் என்று கூறியது அரசியல் கட்சியினர், மொழிப்பற்றாளர்கள் என பல தரப்பினரின் விமர்சனத்திற்கும் உள்ளானது.

அதேபோல் நேற்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டின முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேரவை நிகழ்ச்சி முடியும் முன்பே, அவையிலிருந்து ஆளுநர் வெளியேறிய சம்பவம் சர்ச்சைக்குள்ளானது.

இதனையடுத்து, தமிழ்நாட்டிற்கான ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் ஆளுநருக்கு எதிரான கண்டனப்பதிவுகளும் முன்வைக்கப்பட்டுவருகின்றன.



அதன் ஒரு பகுதியாக, கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தியும், அவரது நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கழகத்தின் அமைப்பு செயலாளர் ஆறுசாமி தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்று மத்திய அரசு மற்றும் ஆளுநருக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர், ஆளுநரின் உருவ பொம்மையை எரித்ததால், அவர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது தபெதிக அமைப்பு செயலாளர் ஆறுமுகசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பல்வேறு போராட்டங்களுக்கு பின், தமிழ்நாடு என பெயர் வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநரோ, தமிழ்நாடு என்ற பெயரை சொல்லுவதற்குக்கூட தயங்குகிறார்.

ஆந்திர பிரதேசம் மத்திய பிரதேசம் போன்றவற்றில் இருக்கக்கூடிய பிரதேசம் என்கின்ற சொல்லும் நாட்டை குறிப்பதுதான். தமிழ்நாடு என்று சொல்ல மாட்டேன் என ஆளுநர் கூறுவதை கண்டித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

ஆளுநர், சமூக நீதி, பெண் உரிமை, பெரியார் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெயர்களைக்கூற மறுப்பத்தைக் கண்டித்தே அவரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே அவர் எழுந்து சென்றது ஜனநாயக மரபு அல்ல

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...