கோவையில் மாட்டுக் கொட்டகைக்குள் புகுந்த காட்டுயானைகள் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

கோவை சின்ன தடாகம் பகுதியில் விவசாயியின் தோட்டத்தில் இன்று அதிகாலை நுழைந்த காட்டு யானைகள், அங்குள்ள மாட்டுக்கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த தீவனப் பொருட்களை உண்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள தடாகம், கணுவாய் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துவருகிறது.

இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டுயானைகள் அவ்வப்போது ஊர் பகுதிக்குள் வந்தவண்ணம் உள்ளன. கடந்த சில தினங்களுக்குமுன்பு அதிகாலையிலேயே அங்குள்ள சாலைகளில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால் மக்கள் அச்சத்தில் இருந்துவந்தனர்.

அதுமட்டுமின்றி, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை சின்ன தடாகம் அடுத்த பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சார்ந்த விவசாயி நரசிம்மராஜ் என்பவரது தோட்டத்திற்குள் இரண்டு காட்டுயானைகள் அதிரடியாக நுழைந்தன.



அங்குமிங்கும் நடமாடிய யானைகள், தோட்டத்தில் உள்ள கொட்டகை ஒன்றில் நுழைந்து, அங்கு மாடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த தவிடு,புண்ணாக்கு, மக்காச்சோள உள்ளிட்ட தீவனங்களை உண்டு சென்றுள்ளது.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளதால், சின்னதடாகம் மற்றும் பாப்பநாய்க்கன் பாளையம் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.



இதனைத் தொடரந்து, அருகில் உள்ள ரங்கசாமி, உதயகுமார் ஆகியோரின் தோட்டத்திற்குள்ளேயும் இந்த யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.

உணவு மற்றும் தண்ணீர் தேடி மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளை, அப்பொழுதே வனத்துறை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தால் மட்டுமே தங்களது உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...