கோவையில் மாட்டுக் கொட்டகைக்குள் புகுந்த காட்டுயானைகள் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

கோவை சின்ன தடாகம் பகுதியில் விவசாயியின் தோட்டத்தில் இன்று அதிகாலை நுழைந்த காட்டு யானைகள், அங்குள்ள மாட்டுக்கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த தீவனப் பொருட்களை உண்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள தடாகம், கணுவாய் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துவருகிறது.

இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டுயானைகள் அவ்வப்போது ஊர் பகுதிக்குள் வந்தவண்ணம் உள்ளன. கடந்த சில தினங்களுக்குமுன்பு அதிகாலையிலேயே அங்குள்ள சாலைகளில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால் மக்கள் அச்சத்தில் இருந்துவந்தனர்.

அதுமட்டுமின்றி, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை சின்ன தடாகம் அடுத்த பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சார்ந்த விவசாயி நரசிம்மராஜ் என்பவரது தோட்டத்திற்குள் இரண்டு காட்டுயானைகள் அதிரடியாக நுழைந்தன.



அங்குமிங்கும் நடமாடிய யானைகள், தோட்டத்தில் உள்ள கொட்டகை ஒன்றில் நுழைந்து, அங்கு மாடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த தவிடு,புண்ணாக்கு, மக்காச்சோள உள்ளிட்ட தீவனங்களை உண்டு சென்றுள்ளது.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளதால், சின்னதடாகம் மற்றும் பாப்பநாய்க்கன் பாளையம் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.



இதனைத் தொடரந்து, அருகில் உள்ள ரங்கசாமி, உதயகுமார் ஆகியோரின் தோட்டத்திற்குள்ளேயும் இந்த யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.

உணவு மற்றும் தண்ணீர் தேடி மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளை, அப்பொழுதே வனத்துறை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தால் மட்டுமே தங்களது உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...