கோவையில் மாட்டுக் கொட்டகைக்குள் புகுந்த காட்டுயானைகள் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

கோவை சின்ன தடாகம் பகுதியில் விவசாயியின் தோட்டத்தில் இன்று அதிகாலை நுழைந்த காட்டு யானைகள், அங்குள்ள மாட்டுக்கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த தீவனப் பொருட்களை உண்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள தடாகம், கணுவாய் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துவருகிறது.

இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டுயானைகள் அவ்வப்போது ஊர் பகுதிக்குள் வந்தவண்ணம் உள்ளன. கடந்த சில தினங்களுக்குமுன்பு அதிகாலையிலேயே அங்குள்ள சாலைகளில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால் மக்கள் அச்சத்தில் இருந்துவந்தனர்.

அதுமட்டுமின்றி, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை சின்ன தடாகம் அடுத்த பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சார்ந்த விவசாயி நரசிம்மராஜ் என்பவரது தோட்டத்திற்குள் இரண்டு காட்டுயானைகள் அதிரடியாக நுழைந்தன.



அங்குமிங்கும் நடமாடிய யானைகள், தோட்டத்தில் உள்ள கொட்டகை ஒன்றில் நுழைந்து, அங்கு மாடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த தவிடு,புண்ணாக்கு, மக்காச்சோள உள்ளிட்ட தீவனங்களை உண்டு சென்றுள்ளது.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளதால், சின்னதடாகம் மற்றும் பாப்பநாய்க்கன் பாளையம் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.



இதனைத் தொடரந்து, அருகில் உள்ள ரங்கசாமி, உதயகுமார் ஆகியோரின் தோட்டத்திற்குள்ளேயும் இந்த யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.

உணவு மற்றும் தண்ணீர் தேடி மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளை, அப்பொழுதே வனத்துறை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தால் மட்டுமே தங்களது உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...