கோவை சூலூரில் ஆளுநர் உருவப்படத்தை எரித்து திமுகவினர் போராட்டம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தி சூலூரில் திமுகவினர் ஆளுநர் உருவப்படத்தை எரித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பேரவையில் ஆளுநர் உரையாற்றியபோது, தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையின் கருத்துக்கள் சிலவற்றை அவர் தவிர்த்துவிட்டார் என திமுக குற்றம்சாட்டியது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசியக் கொண்டிருந்தபோது, ஆளுநர் திடீரென அவையிலிருந்து வெளியேறினார்.



தமிழக ஆளுநரின் இந்த நடவடிக்கையை கண்டித்து கோவை மாவட்டம் சூலூர் கலங்கல் சாலை சந்திப்பில் திமுகவினர் நேற்றிரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



அப்போது, ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசுக்கு எதிராகவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும் செயல்படுவதாக கூறி முழக்கங்களை எழுப்பிய திமுகவினர், மத்திய அரசு அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தினர்.



அப்போது, ஆளுநர் ஆர்.என். ரவியின் உருவப்படங்களை சாலையில் நடுவே நின்றவாறு திமுகவினர் தீயிட்டுக் கொளுத்தி தொடர் முழக்கங்களை எழுப்பியதால், அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...