கோவை சூலூரில் ஆளுநர் உருவப்படத்தை எரித்து திமுகவினர் போராட்டம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தி சூலூரில் திமுகவினர் ஆளுநர் உருவப்படத்தை எரித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பேரவையில் ஆளுநர் உரையாற்றியபோது, தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையின் கருத்துக்கள் சிலவற்றை அவர் தவிர்த்துவிட்டார் என திமுக குற்றம்சாட்டியது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசியக் கொண்டிருந்தபோது, ஆளுநர் திடீரென அவையிலிருந்து வெளியேறினார்.



தமிழக ஆளுநரின் இந்த நடவடிக்கையை கண்டித்து கோவை மாவட்டம் சூலூர் கலங்கல் சாலை சந்திப்பில் திமுகவினர் நேற்றிரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



அப்போது, ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசுக்கு எதிராகவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும் செயல்படுவதாக கூறி முழக்கங்களை எழுப்பிய திமுகவினர், மத்திய அரசு அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தினர்.



அப்போது, ஆளுநர் ஆர்.என். ரவியின் உருவப்படங்களை சாலையில் நடுவே நின்றவாறு திமுகவினர் தீயிட்டுக் கொளுத்தி தொடர் முழக்கங்களை எழுப்பியதால், அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...