கோவை குருடம்பாளையத்தில் பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கல்

குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வி.எஸ்.கே.நகர் மற்றும் வடமதுரை நியாய விலைக் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை ஒன்றியச் செயலாளர் கார்த்திக் தொடங்கி வைத்தார்.


கோவை: தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு இன்று முதல் பொங்கல் சிறப்புத் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.



இதன் ஒரு பகுதியாக, கோவை குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வி.எஸ்.கே.நகர் மற்றும் வடமதுரை நியாய விலைக் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியினை ஒன்றிய செயலாளர் கார்த்திக் தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சியில் ஒன்றியக் கவுன்சிலர் ஆறுச்சாமி, குருடம்பாளையம் ஊராட்சி துணைத் தலைவர் வசந்தாமணி விஸ்வநாதன், மாவட்ட பிரதிநிதி அருணா நகர் சண்முகம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சகா விக்னேஷ், வார்டு கவுன்சிலர் வளர்மதி, கிளைச் செயலாளர் சுரேஷ், தினகரன், முன்னாள் ஒன்றிய பிரதிநிதி பூபதி, நிர்வாகிகள் அம்மன் கனகராஜ், ஸ்ரீதர், தில்லை நடராஜன், மணிகண்டன், தியாகராஜன், தலைமைக் கழகப் பேச்சாரளர் உடுமலை தண்டபாணி, ரஞ்சித், ஆறுமுகம், ஆட்டோ ஸ்டாண்ட் நண்பர்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...