கோவை குருடம்பாளையத்தில் பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கல்

குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வி.எஸ்.கே.நகர் மற்றும் வடமதுரை நியாய விலைக் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை ஒன்றியச் செயலாளர் கார்த்திக் தொடங்கி வைத்தார்.


கோவை: தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு இன்று முதல் பொங்கல் சிறப்புத் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.



இதன் ஒரு பகுதியாக, கோவை குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வி.எஸ்.கே.நகர் மற்றும் வடமதுரை நியாய விலைக் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியினை ஒன்றிய செயலாளர் கார்த்திக் தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சியில் ஒன்றியக் கவுன்சிலர் ஆறுச்சாமி, குருடம்பாளையம் ஊராட்சி துணைத் தலைவர் வசந்தாமணி விஸ்வநாதன், மாவட்ட பிரதிநிதி அருணா நகர் சண்முகம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சகா விக்னேஷ், வார்டு கவுன்சிலர் வளர்மதி, கிளைச் செயலாளர் சுரேஷ், தினகரன், முன்னாள் ஒன்றிய பிரதிநிதி பூபதி, நிர்வாகிகள் அம்மன் கனகராஜ், ஸ்ரீதர், தில்லை நடராஜன், மணிகண்டன், தியாகராஜன், தலைமைக் கழகப் பேச்சாரளர் உடுமலை தண்டபாணி, ரஞ்சித், ஆறுமுகம், ஆட்டோ ஸ்டாண்ட் நண்பர்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...