திருப்பூர் பல்லடத்தில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் அசத்திய இளைஞர்கள்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் பல்லடத்தில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடத்தப்பட்டது.



பல்லடம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.



50 கிலோ முதல் 75 கிலோ எடை பிரிவின்கீழ் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டி மேடையில் வரிசையாக நின்ற இளைஞர்கள், வண்ணம் பூசிய தங்களது கட்டுடலை பல்வேறு நிலைகளில் அழகுப்படக் காட்டி, திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். விசில் சத்தங்கள் முழங்க பார்வையாளர்களும், போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.



பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த ஆணழகன் போட்டியில், ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெற்ற ஆணழகன்களுக்கு பரிசுகளும், பதக்கங்களும் அறிவிக்கப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், பல்லடம் தி.மு.க நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை அணிவித்து, நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர்

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...