திருப்பூர் பல்லடத்தில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் அசத்திய இளைஞர்கள்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் பல்லடத்தில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடத்தப்பட்டது.



பல்லடம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.



50 கிலோ முதல் 75 கிலோ எடை பிரிவின்கீழ் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டி மேடையில் வரிசையாக நின்ற இளைஞர்கள், வண்ணம் பூசிய தங்களது கட்டுடலை பல்வேறு நிலைகளில் அழகுப்படக் காட்டி, திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். விசில் சத்தங்கள் முழங்க பார்வையாளர்களும், போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.



பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த ஆணழகன் போட்டியில், ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெற்ற ஆணழகன்களுக்கு பரிசுகளும், பதக்கங்களும் அறிவிக்கப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், பல்லடம் தி.மு.க நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை அணிவித்து, நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர்

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...