திருப்பூர் பல்லடத்தில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் அசத்திய இளைஞர்கள்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் பல்லடத்தில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடத்தப்பட்டது.



பல்லடம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.



50 கிலோ முதல் 75 கிலோ எடை பிரிவின்கீழ் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டி மேடையில் வரிசையாக நின்ற இளைஞர்கள், வண்ணம் பூசிய தங்களது கட்டுடலை பல்வேறு நிலைகளில் அழகுப்படக் காட்டி, திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். விசில் சத்தங்கள் முழங்க பார்வையாளர்களும், போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.



பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த ஆணழகன் போட்டியில், ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெற்ற ஆணழகன்களுக்கு பரிசுகளும், பதக்கங்களும் அறிவிக்கப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், பல்லடம் தி.மு.க நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை அணிவித்து, நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர்

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...