விழித்திரை மூலம் ரேஷன் பொருட்கள் பெற நடவடிக்கை: முதற்கட்டமாக 35,000 கடைகளில் அமல் - கோவையில் அமைச்சர் சக்கரபாணி

கோவை ராமநாதபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சக்கரபாணி, வரும் 9 ஆம் தேதி முதல் முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும் என்று கூறினார்.


கோவை: கோவை மாவட்டம் ராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் உள்ள நியாய விலை கடையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது, நியாய விலைக்கடைக்கு வந்துள்ள பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பிற்கான பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.



இந்த ஆய்வுக்கு பின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கும் ரூபாய் ஆயிரம் ரொக்கப் பணமும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்குவதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி வரும் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதல்வர் ஒன்பதாம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதே நாளில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது. அனைவரும் பெற்றுக்கொள்ளலாம். வாங்க முடியாத நபர்கள் வாங்குவதற்காக 14ஆம் தேதி சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மட்டும் 11 லட்சத்து 255 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். மொத்தம் உள்ள 1,404 நியாய விலை கடைகள் உள்ளது. கோவை மாவட்டத்தில் 100 சதவீத பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வந்துவிட்டது. விநியோகம் செய்வதற்காக 90 சதவீத கரும்புகள் வந்துள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னவற்றை எல்லாம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். நியாயவிலை கடைகளில் தேங்காய் எண்ணெய் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

பாமக நிறுவனர் ராமதாஸ் 5 அடி கரும்பை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் மூன்று துண்டு கரும்புகள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது ஒரு முழு கரும்பு வழங்கப்பட உள்ளது.

நியாய விலைக் கடைகளில் கைரேகை வைப்பதில் உள்ள பல்வேறு சிரமங்களை போக்கும் விதமாக கண் விழித்திரை மூலம் நியாய விலை கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 35 ஆயிரம் கடைகளில் சோதனை முறையில் கொண்டு வரப்பட உள்ள இந்த திட்டம், பின்னர் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...