விழித்திரை மூலம் ரேஷன் பொருட்கள் பெற நடவடிக்கை: முதற்கட்டமாக 35,000 கடைகளில் அமல் - கோவையில் அமைச்சர் சக்கரபாணி

கோவை ராமநாதபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சக்கரபாணி, வரும் 9 ஆம் தேதி முதல் முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும் என்று கூறினார்.


கோவை: கோவை மாவட்டம் ராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் உள்ள நியாய விலை கடையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது, நியாய விலைக்கடைக்கு வந்துள்ள பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பிற்கான பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.



இந்த ஆய்வுக்கு பின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கும் ரூபாய் ஆயிரம் ரொக்கப் பணமும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்குவதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி வரும் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதல்வர் ஒன்பதாம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதே நாளில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது. அனைவரும் பெற்றுக்கொள்ளலாம். வாங்க முடியாத நபர்கள் வாங்குவதற்காக 14ஆம் தேதி சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மட்டும் 11 லட்சத்து 255 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். மொத்தம் உள்ள 1,404 நியாய விலை கடைகள் உள்ளது. கோவை மாவட்டத்தில் 100 சதவீத பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வந்துவிட்டது. விநியோகம் செய்வதற்காக 90 சதவீத கரும்புகள் வந்துள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னவற்றை எல்லாம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். நியாயவிலை கடைகளில் தேங்காய் எண்ணெய் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

பாமக நிறுவனர் ராமதாஸ் 5 அடி கரும்பை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் மூன்று துண்டு கரும்புகள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது ஒரு முழு கரும்பு வழங்கப்பட உள்ளது.

நியாய விலைக் கடைகளில் கைரேகை வைப்பதில் உள்ள பல்வேறு சிரமங்களை போக்கும் விதமாக கண் விழித்திரை மூலம் நியாய விலை கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 35 ஆயிரம் கடைகளில் சோதனை முறையில் கொண்டு வரப்பட உள்ள இந்த திட்டம், பின்னர் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...