விழித்திரை மூலம் ரேஷன் பொருட்கள் பெற நடவடிக்கை: முதற்கட்டமாக 35,000 கடைகளில் அமல் - கோவையில் அமைச்சர் சக்கரபாணி

கோவை ராமநாதபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சக்கரபாணி, வரும் 9 ஆம் தேதி முதல் முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும் என்று கூறினார்.


கோவை: கோவை மாவட்டம் ராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் உள்ள நியாய விலை கடையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது, நியாய விலைக்கடைக்கு வந்துள்ள பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பிற்கான பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.



இந்த ஆய்வுக்கு பின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கும் ரூபாய் ஆயிரம் ரொக்கப் பணமும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்குவதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி வரும் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதல்வர் ஒன்பதாம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதே நாளில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது. அனைவரும் பெற்றுக்கொள்ளலாம். வாங்க முடியாத நபர்கள் வாங்குவதற்காக 14ஆம் தேதி சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மட்டும் 11 லட்சத்து 255 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். மொத்தம் உள்ள 1,404 நியாய விலை கடைகள் உள்ளது. கோவை மாவட்டத்தில் 100 சதவீத பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வந்துவிட்டது. விநியோகம் செய்வதற்காக 90 சதவீத கரும்புகள் வந்துள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னவற்றை எல்லாம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். நியாயவிலை கடைகளில் தேங்காய் எண்ணெய் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

பாமக நிறுவனர் ராமதாஸ் 5 அடி கரும்பை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் மூன்று துண்டு கரும்புகள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது ஒரு முழு கரும்பு வழங்கப்பட உள்ளது.

நியாய விலைக் கடைகளில் கைரேகை வைப்பதில் உள்ள பல்வேறு சிரமங்களை போக்கும் விதமாக கண் விழித்திரை மூலம் நியாய விலை கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 35 ஆயிரம் கடைகளில் சோதனை முறையில் கொண்டு வரப்பட உள்ள இந்த திட்டம், பின்னர் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...