கோவை வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிகர்கள், அலுவலர்களுடான ஆய்வு கூட்டம்

வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிகர்கள் மற்றும் அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் இயக்குநர் நடராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.


கோவை: இக்கூட்டத்தில் பேசிய வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குநர் நடராஜன், கோவை மாவட்டத்தில் அனைத்து உழவர் சந்தைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறி மற்றும் பழங்களை இடைத்தரகர்கள் குறுக்கீடின்றி நேரடியாக விற்பனை செய்யவும் முடிகின்றது.

வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள், உழவர், உற்பத்தியாளர், நிறுவனங்கள், வேளாண் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுக்கு தேவையான கட்டுமான வசதிகளை ஏற்படுத்திகொள்ளவும், இதற்கு வங்கியில் 4 சதவட்டியில் வங்கிகடன் பெறவும் எதுவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட தொகைக்கு 3 சதவிகிதம் வட்டியில் விலக்கு அளிக்கப்படுவதால் நிகர வட்டிவிகிதம் 1 சதவிகிதமாகவும் உள்ளது.

இந்த திட்டத்தினை விவசாயிகள் அனைவரும் பெற்றுக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். மேலும், மாநிலம் முழுவதிலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைத்திடும் நோக்கில் விவசாயிகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தோற்றுவித்து செயல்படுத்திட பல்வேறு வகையில் ஊக்கப்படுத்தி வருகின்றது.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் விளைப்பொருட்களை கொள்முதல் செய்து விற்பனைமற்றும் விதை உரங்கள் பயிர் பாதுகாப்பு மருந்துகள் வணிகம் செய்வது மூலமாக லாபம் ஈட்டவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது பங்குதாரர்களுக்கு விதை, உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து வழங்கவும் விளைவிக்கப்பட்ட பொருட்களை மதிப்பு கூட்டவும், மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்யவும் தேவையான நிதி அரசிடமிருந்து பெறவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அரசின் இதுபோன்ற முன்னோடித் திட்டங்களை விவசாயிகள், வேளாண் மதிப்புகூட்டு பொருள் தாயாரித்து விற்பனை செய்வோர் பயனடையும் வகையில் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்று தெரிவித்தார்.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சபி அகமது மற்றும் வணிகர்கள் வேளாண் விற்பனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...