'கோவை மாவட்டத்திற்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை..!' - எம்எல்ஏ எஸ்பி வேலுமணி குற்றச்சாட்டு

தமிழக அரசை கண்டித்து அதிமுக எம்எல்ஏ எஸ்பி வேலுமணி தலைமையில் கோவை குனியமுத்தூர் பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.



கோவை: அப்போது அதிமுக தொண்டர்களிடையே பேசிய எம்எல்ஏ எஸ்பி வேலுமணி, கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறோம். திமுக ஆட்சி இரண்டாண்டுகள் நெருங்கும் நிலையில், ஏதாவது ஒரு திட்டத்தை தமிழக அரசு குனியமுத்தூருக்கு செய்துள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.



பொங்கலுக்கு கரும்பு வாங்க போராட்டம் நடத்த வேண்டியதாக உள்ளது. ஸ்டாலின் செய்த ஒரே சாதனை மகனை அமைச்சராக்கியதுதான். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி அப்புறம் இன்பநிதி என தொடர்ந்து வருவார்கள்.

தமிழகத்தின் பெரிய கட்சி அதிமுக தான். தைரியம் இருந்தால் ஒத்தைக்கு ஒத்தை நிற்கலாம். பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியை வெல்வோம். நாங்க திரும்ப வருவோம் திமுக செய்யாததை நாங்கள் வந்து செய்வோம்.



மின் கட்டணம், சொத்து வரி, பால் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும். திமுகவிற்கு ஏன் ஓட்டு போட்டோம் என்று குறை கூறும் அளவிற்கு திமுக அரசு உள்ளதாக தெரிவித்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ எஸ்.பி வேலுமணி, கோவை மாவட்டத்தில் திமுக அரசு 20 மாதங்களாக எதுவும் செய்யாமல் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டினார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்கள் மந்தகதியில் நடப்பதாகவும், பல்வேறு திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டினார்.

ஆளுநர் தமிழ்நாடு என்பதற்கு தமிழகம் என அனைவரும் அழைக்கலாம் என கூறியது குறித்து கருத்து கேட்டதற்கு அது குறித்து நான் பார்த்துவிட்டு பதில் அளிக்கிறேன் என்றார்.

தமிழ்நாட்டில் பெரிய கட்சி என்றால் அதிமுக தான். அதன் பிறகு தான் திமுக மற்ற கட்சிகள் எல்லாம். எடப்பாடி தலைமையில் இருக்கின்ற அதிமுக தான் ஒரே அதிமுக. வருகின்ற நாடாளுமன்றம் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் நிச்சயமாக வெல்வார் என்று தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...