கோவை நஞ்சுண்டாபுரத்தில் 4 ஆண்டுகளாக தொடர்ந்த மின்சார பிரச்சினை - அமைச்சர் உத்தரவால் தீர்வு

கோவையில் உள்ள நஞ்சுண்டாபுரத்தில் ரூ.7.5 லட்சம் மதிப்பில் புதியதாக டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டு, நான்கு ஆண்டுகளாக இருந்த மின் பிரச்சனை சரி செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் ஊராட்சி, திருவள்ளுவர் நகர் பிருந்தாவன் வீதி பகுதியில் சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார பிரச்சனை இருந்து வந்தது.



இது குறித்து அப்பகுதி பலமுறை கோரிக்கைகள் விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கவனத்திற்கு கொண்டு சொல்லப்பட்ட நிலையில் உடனடியாக அங்குள்ள பிரச்சனையை களைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.



இதன் அடிப்படையில், அப்பகுதியில் சுமார் ரூ.7.5 லட்சம் மதிப்பில் புதியதாக டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டு நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இதனை விரைந்து முடித்துக் கொடுத்த கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவிக்கு, மாவட்ட நிர்வாகிகள், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய நிர்வாகிகள், பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.



இதன் துவக்க நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் சி.எம்.கே குமார், கோவை வடக்கு மாவட்ட திமுக கழக துணைச் செயலாளர் அசோக் பாபு தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், முன்னாள் நஞ்சுண்டாபுரம் ஊராட்சி தலைவர் சுந்தர்ராஜ், துணை தலைவர் திருநாவுக்கரசு, கிளை செயலார் குமாரசாமி, திமுக இளைஞரணி உறுப்பினர் விபின் உள்ளிட்ட ஒரு கலந்து கொண்டு அப்பகுதி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...