கோவை நஞ்சுண்டாபுரத்தில் 4 ஆண்டுகளாக தொடர்ந்த மின்சார பிரச்சினை - அமைச்சர் உத்தரவால் தீர்வு

கோவையில் உள்ள நஞ்சுண்டாபுரத்தில் ரூ.7.5 லட்சம் மதிப்பில் புதியதாக டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டு, நான்கு ஆண்டுகளாக இருந்த மின் பிரச்சனை சரி செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் ஊராட்சி, திருவள்ளுவர் நகர் பிருந்தாவன் வீதி பகுதியில் சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார பிரச்சனை இருந்து வந்தது.



இது குறித்து அப்பகுதி பலமுறை கோரிக்கைகள் விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கவனத்திற்கு கொண்டு சொல்லப்பட்ட நிலையில் உடனடியாக அங்குள்ள பிரச்சனையை களைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.



இதன் அடிப்படையில், அப்பகுதியில் சுமார் ரூ.7.5 லட்சம் மதிப்பில் புதியதாக டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டு நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இதனை விரைந்து முடித்துக் கொடுத்த கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவிக்கு, மாவட்ட நிர்வாகிகள், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய நிர்வாகிகள், பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.



இதன் துவக்க நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் சி.எம்.கே குமார், கோவை வடக்கு மாவட்ட திமுக கழக துணைச் செயலாளர் அசோக் பாபு தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், முன்னாள் நஞ்சுண்டாபுரம் ஊராட்சி தலைவர் சுந்தர்ராஜ், துணை தலைவர் திருநாவுக்கரசு, கிளை செயலார் குமாரசாமி, திமுக இளைஞரணி உறுப்பினர் விபின் உள்ளிட்ட ஒரு கலந்து கொண்டு அப்பகுதி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...