கோவை நஞ்சுண்டாபுரத்தில் 4 ஆண்டுகளாக தொடர்ந்த மின்சார பிரச்சினை - அமைச்சர் உத்தரவால் தீர்வு

கோவையில் உள்ள நஞ்சுண்டாபுரத்தில் ரூ.7.5 லட்சம் மதிப்பில் புதியதாக டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டு, நான்கு ஆண்டுகளாக இருந்த மின் பிரச்சனை சரி செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் ஊராட்சி, திருவள்ளுவர் நகர் பிருந்தாவன் வீதி பகுதியில் சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார பிரச்சனை இருந்து வந்தது.



இது குறித்து அப்பகுதி பலமுறை கோரிக்கைகள் விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கவனத்திற்கு கொண்டு சொல்லப்பட்ட நிலையில் உடனடியாக அங்குள்ள பிரச்சனையை களைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.



இதன் அடிப்படையில், அப்பகுதியில் சுமார் ரூ.7.5 லட்சம் மதிப்பில் புதியதாக டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டு நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இதனை விரைந்து முடித்துக் கொடுத்த கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவிக்கு, மாவட்ட நிர்வாகிகள், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய நிர்வாகிகள், பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.



இதன் துவக்க நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் சி.எம்.கே குமார், கோவை வடக்கு மாவட்ட திமுக கழக துணைச் செயலாளர் அசோக் பாபு தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், முன்னாள் நஞ்சுண்டாபுரம் ஊராட்சி தலைவர் சுந்தர்ராஜ், துணை தலைவர் திருநாவுக்கரசு, கிளை செயலார் குமாரசாமி, திமுக இளைஞரணி உறுப்பினர் விபின் உள்ளிட்ட ஒரு கலந்து கொண்டு அப்பகுதி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...