முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை முகாம்

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.



நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் 29 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தாயிடமிருந்து பிரிந்து தவிக்கும் காட்டுயானை குட்டிகள் மற்றும் பொதுமக்களை தாக்கி கொல்லும் யானைகளை பிடித்து வரப்பட்டு வளர்க்கபட்டு வருகின்றன. அதில் சில யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டும், சில யானைகள் கும்கிகளாகவும் உள்ளன.



இந்த நிலையில் யானைகளின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முகாமில் உள்ள யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.



அந்த பரிசோதனைக்கு பின் யானைகளின் உடல் எடைக்கு ஏற்ப உணவுகள் வழங்கபட்டு, உடல் பயிற்சிகள் வழங்கபடுகின்றன.



அதன் படி முதுமலை அருகே தொரப்பள்ளியில் உள்ள வனத்துறை சோதனை சாவடிக்கு யானைகள் அழைத்து செல்லபட்டு அவற்றின் உடல் எடை சோதனை செய்யப்பட்டது. வயதான யானைகள் மற்றும் மஸ்து யானைகள் தவிர்த்து முகாமிலிருந்த 19 யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...