கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கோவை மாவட்ட மையத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வெளியிலும் பின்னர் வளாகத்திற்கு உள்ளும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். இதில் அரசு ஊழியர் சங்க கோவை மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார்.

"பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள அகவிலைப் படியை உடனடியாக வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதல் நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
தொகுப்பூதியம் சிறப்பு கால முறை ஊதியம் மற்றும் தினக்கூலியில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி, எம்ஆர்பி செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர், ஊர் புற நூலகர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
சாலை பணியாளர்களில் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும், முதல்வரிடம் ஜாக்டோ ஜியோ சார்பில் வழங்கப்பட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். இதில் அரசு ஊழியர் சங்க கோவை மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார்.
"பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள அகவிலைப் படியை உடனடியாக வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதல் நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
தொகுப்பூதியம் சிறப்பு கால முறை ஊதியம் மற்றும் தினக்கூலியில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி, எம்ஆர்பி செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர், ஊர் புற நூலகர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
சாலை பணியாளர்களில் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும், முதல்வரிடம் ஜாக்டோ ஜியோ சார்பில் வழங்கப்பட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.